புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2015

கவுண்டிப் போட்டியில் மிரட்டல்: 501 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை


news
இங்கிலாந்தில் நடந்து வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் 501 ஓட்டங்களை குவித்து ஒரு ஜோடி புதிய சாதனை படைத்துள்ளது.
 
லாங்ஷயர் அணியும் கிளமார்கன் அணியும் மோதிய இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லாங்ஷயர் அணி 698 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
 
இதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய கிளமார்கன் அணிக்கு 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தென் ஆப்ரிக்க வீரர்கள் பீட்டர்சன் (286 ஓட்டங்கள்), ஆஷ்வெல் பிரின்ஸ் (261 ஓட்டங்கள்) நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
 
இதனால் இந்த ஜோடி 501 ஓட்டங்களை குவித்து புதிய சாதனை படைத்தது. சர்வதேச அளவில் முதல் தர போட்டியில் ஒரு ஜோடி 500 ஓட்டங்களை கடப்பது இது 13வது முறையாகும்.
 
ஆனால் 151 கால கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜோடி 500 ஓட்டங்களை கடப்பது இதுவே முதன்முறை.

ad

ad