புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2015

ராஜபக்‌ஷ குருணாகலில் பிரசன்னவுக்கும் வேட்புமனு


மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐ.ம.சு.முவில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக
அக்கட்சி அறிவித்துள்ளது.
இதனையடுத்து பிரசன்ன ரணதுங்கவுக்கு வேட்புமனு வழங்காவிட்டால் தாங்கள் தனியாக களமிறங்கப் போவதாகக் கூறிய மஹிந்த ராஜபக்‌ஷ ஐ.ம.சு.முவில் தான் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
குருணாகல் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காகவே அவர் கையெழுத்திட்டுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.ம.சு.முவில் ரணதுங்க குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு வேட்புமனு வழங்கப்பட்டுள்ளதால் பிரசன்னவுக்கு வேட்புமனு வழங்க முடியாது எனும் சிக்கல் நேற்று (08) ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ஆதரவுக் குழுவினர்களான வாசுதேச நாணயக்கார ஏற்கனவே ஐ.ம.சு.முவில் போட்டியிடுவதற்கான மனுவில் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad