புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2015

எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு அமைச்சர்கள், ரஜினி உள்பட ஏராளமானோர் அஞ்சலி!

 மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று
அதிகாலை 4 மணியளவில் மரணமடைந்தார். சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில், எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகத்தினர், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன், அகில மூவேந்தர் முன்னேற்ற முன்னணி அமைப்பின் டாக்டர் சேதுராமன், ஏசி சண்முகம் ஆகியோர் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மேலும், ஏவிஎம் சரவணன், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் டி.ராஜேந்தர், சிவகுமார், ஒய்ஜி மகேந்திரன், ராஜேஷ், விவேக், பாடகிகள் சுசிலா, வாணிஜெயராம், நித்யஸ்ரீ, இயக்குநர் ஜனநாதன், நடிகைகள் குஷ்பு, குயிலி உள்ளிட்ட ஏராளமானவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

படப்பிடிப்புகள் நாளை ரத்து

விஸ்வநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ad

ad