புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2015

மைக்கேல் ஜாக்சனை நாங்களே கொலை செய்தோம்: அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு அறிவிப்பு

ST
உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன்.  இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார்.  இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.  அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

எனினும் ஜாக்சனின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கூறப்படுகின்றன.  இந்நிலையில், அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு ஒருவர் மைக்கேல் ஜாக்சனை கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டத்தில் தனக்கும் ஒரு பங்கு உள்ளது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய மன கட்டுப்பாட்டு திட்டம் எம்.கே. அல்ட்ரா.  இந்த திட்டம் தனது விஷ கொடுக்கை இசை துறையில் பதித்துள்ளது.  அதனுடன் அதற்காக செயல்படும் இல்லுமினாட்டி எனப்படுபவர்கள் நீண்ட காலம் மைக்கேல் ஜாக்சன் மீது தங்களது பார்வையை பதித்திருந்துள்ளனர்.

மைக்கேல் ஜாக்சனை கொலை செய்வது குறித்த திட்டம் அவருக்கு முன்பே தெளிவாக தெரியும்.  அவரது மரணத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தனது முன்னாள் மேலாளரை தொடர்பு கொண்டுள்ள ஜாக்சன், குழு ஒன்று என்னை கொல்வதற்கு விரும்புகிறது என்றும் அது அரசு இல்லை என்றும் அரசை கடந்து வேறு ஒன்று இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து நியான்நெட்டில் என்ற வெப்சைட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதனை நிரூபிக்கும் வகையில், மைக்கேல் ஜாக்சன் முன்னாள் மேலாளர் டயட்டர் வெய்ஸ்னருடன் இறுதியாக பேசியது குறித்த உரையாடல் அடங்கிய தொலைபேசி பதிவு உள்ளது.  அதில் ஜாக்சன், இதனை நிச்சயமுடன் நான் உங்களிடம் கூற வேண்டும் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை.

சிலர் அடங்கிய ஒரு குழு இருக்க கூடும்.  அவர்கள் என்னை இங்கிருந்து அனுப்ப விரும்புகிறார்கள்.  இனியும் நான் இங்கு இருப்பதை அவர்கள் விரும்பவில்லை.  இது குறித்து தொலைபேசி வழியே என்னால் பேச முடியாது.  என்ன நடக்க போகிறது என்பது குறித்து எனக்கு தெரியாது.  ஆனால், எனது உளபூர்வமுடன் இதனை நான் உணர்கிறேன்.  கடவுளுக்கே அது தெரியும்.  அவர்கள் என்னை துப்பாக்கியால் சுடலாம்.  கத்தியால் குத்தலாம்.  அவர்கள் என்னை குற்றவாளியாக்க சிக்க வைக்க முயற்சிக்கலாம்.

எனக்கு அதிக அளவில் மருந்துகளை கொடுத்துள்ளனர்.  அவர்கள் எதை வேண்டும் என்றாலும் செய்ய கூடும்.  அது அரசாங்கம் இல்லை.  அதனை தவிர்த்து வேறு ஒன்று உள்ளது.  டயட்டர் அது எனக்கு தெரியவில்லை.  நான் கவலைப்படவும் இல்லை.  அவர்கள் எனது உயிரை எடுத்து விட கூடும்.  எனது வாழ்க்கை குறித்து நான் கவனத்தில் கொள்ள கூட இல்லை.

எனது தேவதைகளான எனது குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.  அவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என கூறியுள்ளார்.  அதன்பின்னர் அடையாளம் தெரியாத குரல் இடைமறிப்பதை அடுத்து அவர் மறைகிறார்.  அதற்கு அடுத்த நாள் ஜாக்சன் மரணமடைந்து உள்ளார்.  அவரது மருத்துவர் கன்ராடு முர்ரே அதிக அளவு புரபனால் என்ற மருந்தை கொடுக்க அனுமதி அளித்ததற்காக கைது செய்யப்படுகிறார்.  இந்த விவகாரத்தில் வேறு சில சக்திகளும் இருக்கின்றன என லட்டோவா ஜாக்சன் தொடர்ந்து கூறி வருகிறார்.

அவர் கூறும்போது, முர்ரே தவறான நபர்களிடம் சிக்கி உள்ளார்.  அவரை சிலர் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர்.  அதை அனைத்தையும் அவர் செய்து உள்ளார்.  அவர்களே ஜாக்சனை கொன்றிருக்க வேண்டும் என இறுதியாக லட்டோவா நம்புகிறார்.  ஆனால் அவர்கள் யார் என எங்களுக்கு தெரியவில்லை.  அவர்கள் இல்லுமினாட்டி என அறியப்படுகிறார்கள்.

ஒரு சமூகம் போன்று வேரூன்றியுள்ள அவர்கள் கடந்த 18வது நூற்றாண்டை சேர்ந்தவர்களாகவும் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் நம்பப்படுகிறது.  அவர்கள் மக்கள் தொகையை பெரிய அளவில் கட்டுப்படுத்த சக்தி வாய்ந்த அமைப்புகளை ஊடுருபவர்களாகவும் இருப்பதுடன் புதிய உலக வரிசையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் அனைத்து பெரிய இசை அமைப்பாளர்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்று நம்பப்படுவதுடன் ஹாலிவுட் மீதும் தங்களது கட்டுப்பாட்டை செலுத்துவார்கள் என நம்பப்படுகிறது.  அந்த வீடியோவில், நடிகர் ராண்டி குவாய்டு தன்னை தடுத்து நிறுத்தவும், தனது புகழை சீர்குலைக்கவும் மற்றும் கொல்லவும் அவர்கள் முயற்சிக்கின்றனர் என நம்புகிறார்.

அவர் கூறும்போது, ஸ்டார் வேக்கர்களான அவர்கள் ஹீத் லெட்ஜர், கிறிஸ் பென் மற்றும் டேவிட் காரடின் ஆகியோர் கொல்லப்பட்டதற்கும் அவர்களே பொறுப்பு என்றும் கூறுகிறார்.  ஒவ்வொரு விசயத்திலும் இல்லுமினாட்டி இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் தகவல் இருக்கிறது.

அவை உண்மை குறித்த விளக்கத்தை கொண்டுள்ளது.  இதனை அடுத்து குவாய்டின் சகோதரர் கனடா நாட்டிற்கு தப்பித்து சென்றுள்ளார்.  மைக்கேல் ஜாக்சனின் மரணத்தில் வேறு ஏதோ நடந்துள்ளது என பலரும் நம்புகின்றனர்.  அமெரிக்காவில் நீதி தவறி போவது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று அல்ல.  ஆனால், அவர்கள் யார் என்பதை குறித்து சரியாக அறிய நாங்களும் காத்திருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ad

ad