புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2015

தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட ஐவர் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் வேலுபிள்ளை பிரபாகரனுடன் இருந்தவர்கள்


சயனைட் குப்பிகள் 75 மற்றும் 300 கிராம் சயனைட்டுடன் தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட ஐவர் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் வேலுபிள்ளை பிரபாகரனுடன் இருந்தவர்கள் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியா பாதுகாப்பு பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் உச்சிபுல்லி பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்மதி தொலைபேசி ஒன்று, நான்கு புவிநிலைகாட்டி கருவிகள் மற்றும் 07 கையடக்க தொலைப்பேசிகளும் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தன.
கிருஸ்ணகுமார் 39 வயதுடைய நபர் 90ஆம் தசாப்த்ததில் இருந்தே புலிகள் அமைப்பிற்காக செயற்பட்டுள்ளதோடு, தமிழ்நாட்டிற்கு 2009ஆம் ஆண்டு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் தமிழ்நாடு முகாமில் இருந்து இரகசியமான முறையில் கடல் வழி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி வருவதற்கு ஆயத்தமாக இருந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளது

ad

ad