புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2015

பேஷ்புக்கில் கேள்விகளுக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பேஷ்புக் வலைத்தள கணக்கின் மூலம் இன்று பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
ராஜபக்சவிடம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்துடன் அவற்றில் பலவற்றிக்கும் மகிந்த ராஜபக்ச பதிலளித்திருந்தார்.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மகிந்த ராஜபக்சவின் இந்த கேள்வி. பதில் திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர். கேள்விகளை அனுப்பிய பலர் மகிந்த பழைய தவறுகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.
அவற்றுக்கு பதிலளித்துள்ள அவர், சில தவறுகளை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளதுடன் அதற்கான வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தவறுகள் குறித்து சுய விமர்சனம் செய்துள்ளதாகவும் தவறுகளை திருத்திக் கொள்ள அவற்றை அறிந்து கொள்வது பயனுள்ளது என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச தவறுகளை திருத்திக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு வந்தால், அவரை சுற்றியுள்ளவர்களின் ஊழல் மோசடிகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பீர்களா என எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள மகிந்த, அப்படியான ஊழல், மோசடிகளுக்கு எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை எனவும் வெளிப்படை தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துடன் அரசாங்க நிர்வாகத்தை முன்னெடுக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad