புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2015

செல்போன் கோபுரத்தில் ஏறி சசிபெருமாள் தற்கொலை மிரட்டல் - பரபரப்பு




குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தி வருகிறார் காந்தியவாதி சசிபெருமாள்( வயது -59 ).  

உண்ணாமலை கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடையை மூடக்கோரி இந்த போராட்டம் நடத்திவருகிறார்.  இவருடன் பேரூராட்சி தலைவர் ஜெயசீலனும் செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சசிபெருமாள், ஜெயசீலன் இருவரும் கையில் மண்ணெண்ணெய் கேன் வைத்துள்ளதால் பரபரப்பும் பதட்டமும் நிலவுகிறது.   மண்ணென்ணெய் கேனுடன் இருக்கும் இருவரை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் ஆயிரம் நாட்களாய் போராடி வருகின்றனர்.  மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துதான் சசிபெருமாள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சசிபெருமாள் இதற்கு முன்பு சிதம்பரத்தில் செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad