புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2015

ஐரோப்பிய நாடொன்றில் வாலிபன் யாழ்ப்பாண யுவதியை முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு காதலிப்பதாக நடித்து யாழ்ப்பாணம் வந்து யுவதியுடன் உறவு கொண்டு கர்ப்பவதியாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளான்

வெளிநாட்டில் வதியும் வாலிபனொருவன் யாழ்ப்பாண யுவதியை முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு காதலிப்பதாக நடித்து யாழ்ப்பாணம் வந்து யுவதியுடன் உறவு கொண்டு கர்ப்பவதியாக்கிவிட்டு  தலைமறைவாகியுள்ளான்

வடமராட்சியை சேர்ந்த 24 வயதான யுவதியே கர்ப்பவதியாக உள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் நண்பியொருவரின் பிறந்ததின நிகழ்விற்கு இந்த யுவதி சென்றிருந்தார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை நண்பி தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துஇ இந்த யுவதிக்கும் ரக் செய்திருந்தார்.
நண்பியின் முகப்புத்தக நண்பர் பட்டியிலிலுள்ள வாலிபன் ஒருவன் இந்த யுவதியின் படத்தை பார்த்து விட்டு நட்புகோரிக்கை விடுத்துள்ளான். கோப்பாயை சேர்ந்த இந்த வாலிபன் தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வசித்து வருகிறான்.
30 வயதானஇ திருமணம் முடிக்காத ஆள் என தன்னை அறிமுகம் செய்துள்ள வாலிபனின் நட்பு கோரிக்கையை யுவதி ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து வாலிபன் யுவதியை தனது வலைக்குள் வீழ்த்தி விட்டான்.
இருவரும் பேஸ்புக்கில் காதலித்தனர். யுவதியை விரைவில் திருமணம் செய்வதாக வாலிபன் வாக்குறுதியளித்துள்ளான். பின்னர் கடந்த மே மாதம் வாலிபன் திடீரென யாழ்ப்பாணம் வந்துள்ளான்.
ஜூலை மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமென வாலிபன் வாக்குறுதியுமளித்து இரண்டு வாரம் உல்லாசம் அனுபவித்து விட்டு பிரியாவிடை பெற்றான்.
அதன்பின்னர் யுவதியுடனான சகல தொடர்பையும் நிறுத்தி தனது முகநூல் கணக்கையும் செயலிழக்கச் செய்து விட்டான்.
தற்போது யுவதி ஒன்றரைமாத கர்ப்பிணியாக உள்ளமை தெரியவந்துள்ளது. உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து பெற்றோர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதே விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிசாரிடமும் முறையிடப்பட்டுள்ளது.

ad

ad