நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியை தொடர்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு மக்கள் அனுப்ப வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
மைத்திரி அரசாங்கத்தில் நாட்டில் நல்லாட்சி தொடர்கின்றது. மக்கள் சுதந்திரமாக வாழமுடியும். நீதித்துறை , மற்றும் சட்டத்துறை , ஊடகத்துறை ஆகியன சுதந்திரமாக செயற்பட முடியும்.
அத்துடன் பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. இந்நிலையில் தோட்ட மக்கள் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். மகிந்த யுகம் வேண்டாம்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இன்று என்ன நடைபெறுகின்றது என்று தெரியாமல் பலர் உளறியுள்ளனர். இவை மகிந்தவின் வீழ்ச்சியை காட்டுகின்றது. எனவே எமக்கு கடந்த கால யுகம் இனிமேல் வேண்டாம். அனைத்து மக்களும் சிந்தித்து செயற்படும் காலம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.