புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2015

பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது; யாழில். கவனயீர்ப்புப் போராட்டம்


வடக்கு -கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பெண்கள்,சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் இன்று யாழ்.நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
-இன்று காலை வேம்படி சந்தியில் ஆரம்பித்த குறித்த போராட்டம் நீதிமன்ற வீதி, காங்கேசன்துறை வீதிவழியாக சத்திரச்சந்தியை அடைந்து அங்கிருந்து யாழ்.நகரை அடைந்தது.    இதன்போது பெண்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது முகங்களில் கேள்விக்குறி அடையாளத்தை கீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

ad

ad