வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.
கொழும்பு மாவட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.
ஜனவரி 8 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி புரட்சியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல பாடுபடுவோம் எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தான் கண்டியில் போட்டியிட உள்ளதாகவும் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணிக்கு மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்களையும் திருகோணமலையில் ஒரு ஆசனத்தையும் வழங்க இணங்கியுள்ளதாகவும் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.