இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் தற்போது மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்று வருகின்றது.
இந்தப் போட்டி நடைபெற்று வரும் மைதானத்தின் ஓர் அரங்கில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கற்களும் போத்தல்கள் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலைமையை கட்டுப்படுத்த கலகத் தடுப்புப் பிரிவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த பதற்ற நிலைமையினால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனவும் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக மைதான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.