புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2015

இலங்கை -பாகிஸ்தான்-மைதானத்தின் குழப்ப நிலைமை


கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் தற்போது மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்று வருகின்றது.
இந்தப் போட்டி நடைபெற்று வரும் மைதானத்தின் ஓர் அரங்கில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கற்களும் போத்தல்கள் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலைமையை கட்டுப்படுத்த கலகத் தடுப்புப் பிரிவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த பதற்ற நிலைமையினால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனவும் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக மைதான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad