புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2015

பரவை முனியம்மாவை மருத்துவமனையில் சந்தித்த சிவகார்த்திகேயன்



‘தூள்’ படத்தில் ‘சிங்கம் போல...’ என்ற பாடலை பாடி நடித்து பிரபலமானவர் பரவை முனியம்மா. இவர் கடைசியாக சிவகார்த்திகேயனுடன் ‘மான் கராத்தே’ படத்தில் பாட்டுபாடி நடித்தார். மேலும் டெலிவிஷனில் சமையல் நிகழ்ச்சிகளிலும் பொது விழாக்களில் நாட்டுப்புற பாடல்களையும் பாடி வந்தார்.

சமீப காலமாக பரவை முனியம்மாவுக்கு படங்கள் இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். வயது முதுமை காரணமாக உடல் நலக்கோளாறும் ஏற்பட்டது. மருந்து வாங்கவும் பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

பரவை முனியம்மா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்ற சிவகார்த்திகேயன், அங்கு பரவை முனியம்மாவை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடம் பரவை முனியம்மாவின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றிருக்கிறார்.

ad

ad