புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2015

மதுபான ஆலையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 55 பேர் கைது



கந்தர்வகோட்டை அருகே மதுபான ஆலையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 55 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சியில் இயங்கிவரும் தனியார் மதுபான ஆலை இந்த பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டபோது இந்த பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள், விவசாயிகள் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும், நிலத்தடிநீர் மாசுபடும் என்றும் இந்த மதுபான ஆலைக்கு எதிராக குரல் எழுப்பினர். 

இதனைத்தொடர்ந்து திமுகவை தவிர மற்ற கட்சிகள் பல்வேறு இயக்கங்கள் தினந்தோறும் போராட்டங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் தடியடி, வழக்குகள் என பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாயினர் இருந்தும் இந்த மதுபான ஆலை தற்போதுவரை இயங்கி வருகின்றது.

ad

ad