புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் 68வீத வாக்குப் பதிவு


இன்று காலை 7மணிமுதல் 4 மணிவரை ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியின் இறுதி வாக்களிப்பு நிலவரத்தின் படி 68 சதவீத வாக்களிப்பும்,பளை 58 சதவீதம், மற்றும் பூநகரி 72 சதவீத வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள உத்தியோகபூர்வ அறிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 74.6 வீதமான வாக்குகள் பதிவு    
வன்னி தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்தில் இன்று  காலை முதல் மாலை வரை சுமூகமான முறையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் இடம் பெற்று வந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் 74.6 வீதமான வாக்குகள் பதிவாகியள்ளதாக மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலகர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.
 
காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம் பெற்ற வாக்களிப்பின் போது பாரிய அளவிலான எவ்வித அசம்பாவிதங்களும் இடம் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
 
தற்போது வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
 
வாக்குகள் எண்ணும் பணிகள் இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும் எனவும் பின்னர் முடிவுகள் கட்டம் கட்டமாக தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்கிளிநொச்சி மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்புடன் சேர்த்து 70.9 வீத வாக்குப் பதிவு 
கிளிநொச்சி தபால்மூல வாக்களிப்புடன் சேர்த்து, ஒட்டுமொத்த வாக்களிப்பு வீதமாக  70.9 பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி  66.5 வீத வாக்களிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad