புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

பாடல்கள் - படக்காட்சிகள் போட்டி : இளையராஜா அறிவிப்பு




இசையமைப்பாளர் இளையராஜா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,
’’எனது பெயரில் போலியாக அதிகமான இணையதளங்கள் உள்ளன. இவை அனைத்தும் அதிகாரப்பூர்வமற்றவை. இந்த போலி இணையதளங்களை உண்மை என்று நம்பி, ரசிகர்கள் ஏமாறுகிறார்கள். 

உலகிலேயே என் பெயரில் தான் அதிகமான போலி இணையதளங்கள் உள்ளன. இந்த இணையதளங்களை முடக்குவதற்காக நடவடிக்கை மேற்கொண்டு உள்ளேன்.

புதிதாக எனது பெயரில் தனி இணையதளத்தையும், ‘யு-டியூப்’ சேனலையும் தொடங்கி இருக்கிறேன். இதன்மூலம், ரசிகர்கள் என்னுடன் இணைந்து பயணிக்கலாம். இந்த இணையதள பக்கத்தில் என்னை பற்றிய புகைப்படங்கள், செய்திகள் இடம்பெறும். ரசிகர்களை உற்சாகப்படுத்த போட்டிகளும் நடத்தப்படும். 

நான் தேர்வு செய்த ‘புத்தம் புது காலை’, ‘நின்னுக்கோரி வர்ணம்’ போன்ற 2 பாடல்களுக்கு இளம் படைப்பாளிகள் தங்களுடைய திறமையில் புதிதாக படப்பிடிப்பு நடத்தி அந்த படக்காட்சிகளை எனது இணையதளத்தில் பதிவு செய்யலாம். சிறப்பாக இருக்கும் படக்காட்சிகளை தேர்வு செய்து, நானே பரிசுகளை வழங்குவேன்’’என்று கூறினார்

ad

ad