புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2015

சந்திரிக்கா என்றும் நல்லாட்சியுடனே- அர்ஜுன ரணதுங்க


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடர்ந்து நாட்டை சரியான வழியில் கொண்டு செல்வதற்காக நல்லாட்சி தரப்பினருடன் இணைந்து செயற்படுவார் என நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் கம்பஹா மாவட்ட தலைவர், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா குமாரதுங்க மகர பிரதேசத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
இன்று இந்த தேர்தல் நல்லவர்கள் மற்றும் கெட்டவர்களுக்கிடையில் இடம்பெறும் ஒன்றாகும். அதாவது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையிலான தேர்தலாகும்.
விசேடமாக சந்திரிக்கா அனைத்து சந்தர்ப்பங்களில் நல்லவர்களுடனே செயற்பட்டார். வேறு வகையில் கூறினால் நல்லாட்சி அரசாங்கத்துடனே அவர் ஒவ்வொரு நாளும் இருந்தார்.
இன்று நல்லாட்சி அரசாங்கம் சந்திரிக்காவின் தலைமைத்துவத்திலே செயற்படுகின்றது. மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்கு உயர்த்துவதற்கு முக்கியமாக செயற்பட்டவரும் சந்திரிக்கா குமாரதுங்க அவர்களே.
இன்று வரையில் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு அவர் நல்லாட்சியுடன் இருப்பார்.
சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆசிர்வாதம் எங்களுக்கு உண்டு. அவர் எதிர்கால பாதுகாப்பு தொடர்பிலும், ஏனைய பிரிவு தொடர்பிலும் எங்களுக்கு தெளிவு படுத்தினார் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்

ad

ad