புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2015

திருமா,மல்லை சத்யா ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, முத்தரசன் கைது



தமிழகத்தில் பூரண மதுவிலக்கை செயல்படுத்தக் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன்,
ஜவாஹிருல்லா உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கைச் செயல்படுத்தக் கோரி இன்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று, காங்கிரஸ் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, புதிய தமிழகம் உள்பட் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

அதன்படி மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சூளையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

ad

ad