புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2015

தமிழ் மக்களை அடிமைகளாக்க சிங்களப் பேரினவாதிகள் எத்தணிக்கையில் ஆயுதம் ஏந்தினார் பிரபாகரன் :மாவை


தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட
ஆரம்பித்த போதுதான் அதற்கு எதிராக வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
 பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி வரைக்கும் ஆதரவாக இருந்தது. 
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளுக்கும் நாம் ஆதரவு வழங்கினோம். அவர்களை உயர்வாக மதித்தோம். எனவே,முன்னால் போராளிகள் எமக்கு ஆதரவு வழங்கவேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கை இராணுவமயமாக்க முயன்ற மஹிந்தவை நமது கட்டுக்கோப்பான ஒற்றுமையால் - வாக்குரிமை என்ற ஆயுதத்தால் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி விரட்டினோம். 
அதேபோன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் நமது உணர்வுகளையும் ஒற்றுமையையும் சரியான முறையில் பயன்படுத்தி எமது பேரம் பேசும் சக்தியை உலகுக்கு உணர்த்த வேண்டும். நமது போராட்டங்களும் தியாகங்களும் வீண் போகக்கூடாது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,:
 "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்கு மட்டுமல்ல, பல்வேறு ஊழல், மோசடி விசாரணைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியவர். 
சில தினங்களின் முன் ராஜபக்‌ஷ மீது 2,481 மில்லியன் மோசடி தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. 
இந்த இனவாதிகளையும் மோசடிப் பேர்வழிகளையும் பாதுகாக்க நமது வாக்குகளைச் சிதறடிக்க வந்துள்ளவர்கள் மீது எம் மக்கள் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும்.
 மஹிந்த ராஜபக்‌ஷவும், ரணில் விக்கிரமசிங்கவும் இனவாதிகள்தான். இவர்கள் நம்மை அடக்கியாள முனைபவர்கள்தான். டக்ளஸ் தேவானந்தாவும் கஜேந்திரகுமாரும் இவர்களுக்குத் துணைபோகின்றனர். 
நாம் சமஷ்டி என்றவுடன் இவர்கள் கொதிப்படைகின்றனர். இவர்களுக்கு வக்காளத்து வாங்குபவர்களையும் நாம் ஒற்றுமையுடன் தோல்வியடையச் செய்யவேண்டும். அதற்குத் தமிழ் மக்களின் ஆணை வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=540154184306518161#sthash.PgPYly6u.dpuf

ad

ad