புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2015

பயோமெற்றிக் முறையிலான கடவுச்சீட்டுகள் அறிமுகம்


பயோமெற்றிக் முறையிலான கடவுச்சீட்டுகள் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது.
கடவுச்சீட்டுக்களில் கைவிரல் அடையாளங்களை பதியும் புதிய நடைமுறை இந்த மாதம் 10ம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
கடவுச்சீட்டின் ஏற்றுக் கொள்ளும் தன்மை, நம்பகத்தன்மை, சர்வதேச ரீதியில் காணப்படும் அங்கீகாரத்தை அதிகரித்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் சர்வதேச சிவில் விமான சேவை தர நிர்ணயங்களுக்கு அமைவாக டிஜிட்டல் புகைப்படங்கள், திணைக்களத்தின் தரவுத் தளத்திற்கு நேரடியாக பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இதற்கென சில அனுமதியளிக்கப்பட்ட சில புகைப்பட ஸ்ரூடியோக்கள் பெயரிடப்பட உள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ad

ad