புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

சாய்னா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை



உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இதனால், வெள்ளிப் பதக்கத்துடன் புதிய சரித்திரம் படைத்தார்.  இதன்மூலம், உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறைப் படைத்துள்ளார் சாய்னா.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில், உலகின் 2-ம் நிலை வீராங்கனையான சாய்னா, உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கரோலினா மரினை சந்தித்தார்.

இறுதிச் சுற்றில், சாய்னா நேவால் 16-21, 19-21 என்ற நேர் செட்களில் கரோலினாவிடம் தோல்வி கண்டார். வெற்றி பெற்ற கரோலினா தனது உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார்.  எனினும், இப்போட்டி முழுவதுமே தன் அற்புதமான ஆட்டத் திறனாலும், அசாத்திய போராட்ட அணுகுமுறையாலும் இந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் சாய்னா.

உலக பாட்மிண்டன் போட்டியில் சாய்னாவின் மூலம் இந்தியாவுக்கு 5-வது பதக்கம் கிடைத்துள்ளது.

ad

ad