புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி மட்டக்களப்பில் சிறை வைப்பு?


தனது கணவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி ஒருவர், கிரிதல, மின்னேரியா அல்லது மட்டக்களப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாக சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
 
 
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் இதுபற்றித் தகவல் வெளியிட்டபோதே சந்தியா எக்னெலிகொட மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எனது கணவர் காணாமற்போன சம்பவத்துடன் ராஜபக்ச ஆட்சி தொடர்புபட்டிருந்தது. 
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய படை அதிகாரிகள் எவரேனும் இருந்தால் அவர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு இராணுவத் தளபதியிடம் கேட்டுள்ளேன்.
மைத்திரிபால – ரணில் அரசாங்கம், விசாரணைகளை ஆரம்பித்துள்ள போதிலும், குற்றப்புலனாய்வுத் துறையினர் பிரகீத் காணாமற்போனது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
எனது கணவர் காணாமற்போனது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட வேண்டும்.
ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது கணவர் காணாமற்போனது குறித்து எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை.
இப்போது அவர்கள், தாம் பதவிக்கு வந்தால் காணாமற்போனது குறித்து விசாரணை நடத்துவோம் என்று கூச்சல் எழுப்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad