புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2015

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் : சம்பந்தன்


நாட்டிலுள்ள தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகண்டு, நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டுமாயின், அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை புல்மோட்டையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் கௌரவத்துடனும், சுய மரியாதையுடனும், பாதுகாப்பாகவும் வாழ இது முக்கியமென குறிப்பிட்டதோடு, தமிழ்-முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.
மேலும் இந்தக் கூட்டத்தில் திருகோணமலை நகராட்சிமன்ற முன்னாள் தலைவர் செல்வராஜா, திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களான துரைரட்ணசிங்கம், இந்துராணி தர்மராஜா, புவனேஸ்வரன் மற்றும் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

ad

ad