கொடுமையான ஆட்சியாளர்கள் இந் நாட்டை மீண்டும் ஆளும் நிலை வரக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்
சரா.புவனேஸ்வரன் கூறினார்.
மூதூர் பள்ளிக்குடியிருப்பில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த சில தசாப்தங்களாக இந்த நாட்டில் மிகவும் கொடுமையான ஆட்சி இடம்பெற்றது. இக்கொடிய ஆட்சியில் தமிழ் மக்கள் மட்டும் கொல்லப்படவில்லை. மதிப்பான கல்வியாளர்கள், திறமையான, நேர்மையான ஊடகவியலாளர்கள், சமூகசேவையாளர்கள், மக்கள் சேவகர்கள் என பலரும் கொல்லப்பட்டனர்.
அதற்கு இவ்வருடம் ஜனவரிமாதம் எட்டாந்திகதி முறையான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதே ஆட்சியாளர்கள் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலூடாக ஆட்சி அமைக்க முனைகின்றனர்.
அதற்கு தமிழ் மக்களாகிய நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு ஆக்கிரோசமாக வாக்களித்தோமோ அதைவிட ஆக்கிரோசமாக இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதிலும் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்பதன்மூலம்தான் அதனை நிரூபிக்கமுடியும்.
அதற்கு தமிழ் மக்களாகிய நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு ஆக்கிரோசமாக வாக்களித்தோமோ அதைவிட ஆக்கிரோசமாக இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அதிலும் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்பதன்மூலம்தான் அதனை நிரூபிக்கமுடியும்.
அத்தோடு சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தவும் முடியும். எனவே எதிர்வரும் பதினேழாம் திகதி வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து எமது முழுப்பலத்தையும் காட்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.