புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

கொடு­மை­யான ஆட்­சி­யா­ளர்கள் மீண்டும் இந்­த­நாட்டை ஆளும் நிலை வரக்­கூ­டாது திருமலை மாவட்ட த.தே.கூ.வேட்பாளர் புவனேஸ்வரன்


கொடுமையான ஆட்சியாளர்கள் இந் நாட்டை மீண்டும் ஆளும் நிலை வரக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்
சரா.புவனேஸ்வரன் கூறினார்.
மூதூர் பள்ளிக்குடியிருப்பில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த சில தசாப்­தங்­க­ளாக இந்த நாட்டில் மிகவும் கொடு­மை­யான ஆட்சி இடம்­பெற்­றது. இக்­கொ­டிய ஆட்­சியில் தமிழ் மக்கள் மட்டும் கொல்­லப்­ப­ட­வில்லை. மதிப்­பான கல்­வி­யா­ளர்கள், திற­மை­யான, நேர்­மை­யான ஊட­க­வி­ய­லா­ளர்கள், சமூ­க­சே­வை­யா­ளர்கள், மக்கள் சேவ­கர்கள் என பலரும் கொல்­லப்­பட்­டனர்.
அதற்கு இவ்­வ­ருடம் ஜன­வ­ரி­மாதம் எட்­டாந்­தி­கதி முறை­யான தீர்ப்பு வழங்­கப்­பட்­டது. அதே ஆட்­சி­யா­ளர்கள் மீண்டும் பாராளு­மன்றத் தேர்­த­லூ­டாக ஆட்சி அமைக்க முனை­கின்­றனர்.
அதற்கு தமிழ் மக்­க­ளா­கிய நாம் ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. ஜனா­தி­பதித் தேர்­தலில் எவ்­வாறு ஆக்­கி­ரோ­ச­மாக வாக்­க­ளித்­தோமோ அதை­விட ஆக்­கி­ரோ­ச­மாக இம்­முறை பாராளு­மன்றத் தேர்­தலில் வாக்­க­ளிக்க வேண்டும். அதிலும் வீட்டுச் சின்­னத்­திற்கு வாக்­க­ளிப்­ப­தன்­மூ­லம்தான் அதனை நிரூ­பிக்­க­மு­டியும்.
அத்­தோடு சர்­வ­தேச சமூ­கத்­திற்கு வெளிப்­ப­டுத்­தவும் முடியும். எனவே எதிர்­வரும் பதி­னேழாம் திகதி வீட்டுச் சின்­னத்­திற்கு வாக்­க­ளித்து எமது முழுப்­ப­லத்­தையும் காட்­டு­மாறு கேட்­டுக்­கொள்­கின்றேன்.

ad

ad