குமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் கடை பள்ளியாடிக்கு மாற்றப்பட்டது. பள்ளியாடியில் மதுபானக் கடையை திறக்க காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தலைமையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ விஜயதாரணி உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் கடந்த வெள்ளிக்கிழமை நடந்திய போராட்டத்தின்போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது