புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2015

த.தே.கூட்டமைப்பை சந்தித்த நிஷா..சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை சென்றிருக்கும் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலேயே இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது,  தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலைமைகள் தொடர்பில் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டதாகவும் கடந்த தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்மக்களின் காணி விடுவிப்பு, வடக்கு கிழக்கு கடற்பரப்பில் தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் யுத்தக்குற்ற அறிக்கை வெளியிடப்ப்படும் என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று நிஷா பீஷ்வால் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொழும்பில் இன்று சுமார் ஒன்றறை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை அறிக்கை குறித்து பேசப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad