புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2015

மதுரை மத்திய சிறையிலிருக்கும் தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தோழர்கள் காளை லிங்கம், தமிழரசன், சான்மார்டின், கவியரசன், கார்த்திக்விடுதலை

ஒன்றரை ஆண்டுகள் தமிழ்த் தேசியத்திற்காக மக்களை ஒருங்கிணைத்து போராடி உழைத்தமைக்காக சிறை வைக்கப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சி
முடக்கப்பட்டு மதுரை மத்திய சிறையிலிருக்கும் தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தோழர்கள் காளை லிங்கம், தமிழரசன், சான்மார்டின், கவியரசன், கார்த்திக் ஆகிய ஐந்து தோழர்களின் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை மதுரை உயர்நீதி மன்றம் இன்று இரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே தோழர் திருச்செல்வம் அவர்களின் மீதான தேசியப் பாதுகாப்பு சட்டம் கடந்த திங்கட்கிழமை இரத்தாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி மகிழ்ச்சியை தருகின்ற அதே நேரம் இத்தனைகாலம் அநியாயமாக இவர்கள் மீது பொய் வழக்கிட்டு முடக்கி வந்த அரச அராஜகம் கண்டனத்திற்குரியதே.
விரைவில் தோழர்கள் விடுதலையாக வாழ்த்துகின்றேன்.
வீழ்ந்து விடாத வீரமும் விலை போகாத நேர்மையும் உண்மையான அரசியல் தோழமைகளை மக்களுக்கு இனம் காட்டி அணி திரள வைக்கின்றன. அந்த வகையில் இந்த ஆறு தோழர்களினதும் இத்தனை கால சிறை வாழ்வின் வலிகள் தமிழ்தேசிய அறத்திற்கு நீர் வார்க்க வாழ்த்துகின்றேன்.
மக்களுக்காக உழைக்கும் உண்மையான தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் தமிழ் மக்களுக்கு போர்க்குணம் வளர்க்க வலிமை ஊட்டுகின்றன. இந்த தோழமைகள் மீதான இத்தனை கால அடக்குமுறைகள் மக்களுக்கு உண்மையான தமிழ் தேசிய உணர்வாளர்கள் யார் என அடையாளம் காட்ட உதவுகின்றன.
தமிழ்த் தேசிய மக்கள் கட்சி தோழமைகளின் மகிழ்ச்சியில் உலகத் தமிழினமும் பங்கேற்கின்றது. வாழ்த்துக்கள் தோழர்களே.

ad

ad