தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் துணைவியார் சுவ்ரா முகர்ஜி மறைந்துவிட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். நீண்ட காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அம்மையார் அதிலிருந்து விடுபடாமலே மறைந்துவிட்டார்.
துணைவியாரை இழந்துவாடும் குடியரசு தலைவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.