புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2015

சுதந்திரக் கட்சியை முழுமையாக கைவிடுகிறார் ஹிருணிகா


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தான் இனி இணைந்து கொள்ளப் போவதில்லை என்று ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
 
எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்கப் போவதில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவின் பக்கத்தில் இனி எந்தக் காலத்திலும் நிற்கப் போவதில்லை. 
 
2013 ஆம் ஆண்டில் மேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் கொலன்னாவ பிரதம அமைப்பாளர் பதவியை மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கோரியிருந்தேன்.
 
அப்போது தந்தையைப் போன்று மரணிக்க விருப்பமா என மஹிந்த என்னிடம் கேள்வி எழுப்பினார். 
 
மஹிந்தவின் இந்தக் கேள்வி என்னைப் பெரிதும் அதிருப்தி அடையச் செய்தது. தந்தையைக் கொலை செய்த அடுத்த நாளே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்தேன். எனினும் அப்போதைய ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலர் அதனைத் தடுத்தனர்

ad

ad