புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2015

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஊழியர் பலியால் பதற்றம்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே டாஸ்மாக் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் அந்த கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்து
உள்ளார். இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு காவல்துறையினரின் மிரட்டல் தான் காரணம் என்று டாஸ்மாக் ஊழியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மதுவுக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில் ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் 2 டாஸ்மாக் கடைகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், மர்ம நபர்களின் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு டாஸ்மாக் ஊழியர் பலியாகி உள்ள சம்பவம் டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனை ஊழியராக இருப்பவர் தலைவாசலை அடுத்த நாவலூரை சேர்ந்த செல்வம். இவர், நேற்று இரவு விற்பனையை முடித்துவிட்டு கடைக்குள் பணத்தை எண்ணிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த சில மர்ம நபர்கள் அந்த கடைக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்த கடை தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைக்குள் இருந்த மது பாட்டில்கள் வெடித்து சிதறி மேலும் தீ பரவி இருக்கிறது. இதனால், கடை முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டு ஊழியர் செல்வம் உயிருக்கு போராடி இருக்கிறார். தீப்பற்றி எரியும் கடைக்குள் இருந்து வெளியே வர முடியாத செல்வம், சக பணியாளர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து தன்னை காப்பாற்றும்படி கதறி இருக்கிறார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டாஸ்மாக் பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். உடனே டாஸ்மாக் பணியாளர்கள், கடைக்குள் மயக்க நிலையில் இருந்த செல்வத்தை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு செல்வத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து டாஸ்மாக் மண்டல் முதுநிலை மேலாளர் தியாகராஜன், சேலம் மாவட்ட எஸ்.பி. (பொறுப்பு) பிரபாகரன், சேலம் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த சில தினங்களாக டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், கடைக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இரவு நேரங்களிலும் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அந்தந்த பகுதி காவல்துறையினர் மிரட்டுகின்றனர். மேலும், காவல்துறையின் மிரட்டல் காரணமாக கடையில் உறங்கிய செல்வம், மர்ம நபர்களின் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பரிதாபமாக பலியாகி இருப்பதாக குற்றஞ்சாட்டினர்

ad

ad