சென்னை பல்கலைகழகத்தில் மாணவர்கள் தங்கள் கல்லூரி வளாகத்திற்கு உள்ளே மதுவிற்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து செல்பவர்களை வளாகத்திற்க்குள் செல்ல நிர்வாகம் அனுமதிக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோதும், நாளையும் போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.