ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியவர்கள் வெகுவிரைவான காலப்பகுதியினுள் விளக்கமறியலுக்கு செல்ல நேரிடும் என ஐக்கிய தேசிய கட்சியில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியவர்களில் பலருக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியவர்கள் இரண்டு மூன்று வாரம் நாடாளுமன்றில் செயற்படுவார்கள்.
அதற்கு பின்னர் வெலிக்கடை விளக்கமறியலுக்கு சென்று தான் அவர்களை பார்க்க முடியும் என்பது எனக்கு மிகவும் உறுதியாக தெரியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.