புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2015

வடக்கில் இரகசிய சித்திரவதை முகாம்களா? படம் பிடித்த சாட்டலைட்




இன்றுவரை இலங்கையில் சித்திரவதை முகாம்கள் இயங்கி வருவதாகவும் , அவை பெரும்பாலும் ராணுவ முகாம்களிலும் , பொலிஸ் நிலையங்களிலும்
மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளதாகவும் வெளிநாட்டு அமைப்பு ஒன்று அறிக்கை சம்ர்ப்பித்து குற்றஞ்சாட்டியுள்ளது. இன்று வரை சுமார் 40 ரகசிய சித்திரவதை முகாம்கள் இயங்கிக் கொண்டு இருப்பதாக இந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
“இன்னமும் முடிவுறாத போர்”: சிறிலங்காவில் சித்திரவதைகள் மற்றும் பாலியல்வன்முறைகளில் இருந்து உயிர் தப்பியோர்- 2009- 2015 என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில்,40 ற்கும் மேற்பட்ட இரகசிய தடுப்பு நிலையங்களின் பெயர்களும் 60ற்கும் மேற்பட்ட பாலியல் குற்றவாளிகள் மற்றும் துன்புறுத்தலாளர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பினால் (ITJP) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பெயர்கள் தவிர வேறு பல சித்திரவதை முகாம்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2.torture_site (2)
அடையாளம் காணப்பட்டுள்ள சித்திரைவதை முகாம்களில் பெரும்பாலானவை தமிழ் பேசும் வடக்கில் அமைந்துள்ளது. இவற்றில் இரண்டில் மூன்று பங்கானவை இராணுவ முகாம்களிலும் ஏனையவை பொலிஸ் நிலையங்களிலும் புனர்வாழ்வு நிலையங்களிலும் அமைந்துள்ளது. சித்திரவதை நிலையங்களாக பட்டியல் படுத்தப்பட்டுள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்கள் கொழும்பிலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் அமைந்துள்ளது.
குறிப்பாக திருகோணமலை டொக்யார்ட் கடற்படைத்தளத்தில், காட்டுக்குள் உள்ளஇரகசியத் தடுப்பு முகாம், வவுனியாவில் யோசெப் முகாமின் தடுப்பு முகாம் மற்றும் கொழும்பிலுள்ள பொலிசாரின் குற்ற விசாரணைப் பிரிவு அடங்கலான 48 சித்திரவதை முகாம்கள் இந்த அறிக்கையில் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன. திருகோணமலையில் இரகசிய சித்திரவதை முகாம் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும் வான்வழி வரைபடமும் இந்த அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.
சித்திரவதைகளிலும் பாலியல் துன்புறுத்தல்களிலும் இருந்து உயிர்பிழைத்தவர்கள் தவிர தகவல் சேகரிப்பதற்காக பாதுகாப்பு தரப்பையும் அரச வட்டாரங்களையும் தொடர்பு கொண்டதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பில் உள்ளவர் ஒருவர் உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பிற்கு வெளிப்படுத்திய தகவல்களில் படி, யோசவ் முகாமிலிருந்து செயற்படும் இராணுவ புலனாய்வாளர்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் தமிழர்களை விசாரணை செய்ய காத்திருக்கின்றனர். மைத்திரிபால சனாதிபதியாக பதவியேற்ற பின்பு இது வரை எட்டு சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களை ITJP பதிவு செய்துள்ளது. அதில் மிக அண்மையானது ஆடி மாதம் 2015இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோசப்முகாமின் தளபதியாக தற்போது மேஜர் ஜெனரல்அமல் கருணசேகர மற்றும் மேஜர் ஜெனரல்களான போனிவிகா பெரேரா, சுமேதா பெரேரா, கமல் குணரத்ன மற்றும் ஜகத் ஜெயசூரிய ஆகியோர் ஜோசப்முகாமின்தளபதியாக2009 இற்குப் பின்னர் இருந்துள்ளனர். பாதுகாப்புத் தரப்பின் உள்ளிருந்து ITJP இக்கு கிடைத்த தகவலின் படி லெப்டினன்ட் ஜெனரல் கிருசாந்திடி சில்வா என்பவர் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகள் தொடர்பான விவகாரங்களை கையாண்டுள்ளார். இதன்போதே பல போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். உயிர் தப்பியவர்களின் சாட்சியப் படி, கட்டளைத்தளபதி கெ.சி. வேலகெதர என்பவர் திருகோணமலையில் உள்ள இரகசிய முகாமின் கடற்படை புலானாய்வு அதிகாரியாக 2010 வரை இருந்துள்ளார்.
பின்னர் கட்டளைத் தளபதி ரணசிங்க என்பவர் இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர்தளபதி டி.கெ.பி. திசநாயக்க, தளபதி சம்பத் முனசிங்க, ரணசிங்கஆரச்சிகே கெட்டி ஆராச்சி மற்றும் ரணசிங்க பிடிகே சுமித்ரணசிங்க போன்றோர் 28 மக்கள் காணாமல் போனதற்கு காரணமாயிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் இவர்களுக்கு வெளிநாடு செல்லத் தடையை கொழும்பு கோட்டைநீதவான் நீதிமன்றம் இந்த ஆண்டு ஏப்ரலில் பிறப்பித்தது பலருக்கு தெரியாத விடயமாக உள்ளது.

ad

ad