திமுக நிர்வாகி பொட்டு சுரேஷ் கொலையில் தேடப்பட்டு வந்த அட்டாக்பாண்டி, மும்பையில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். மும்பையிலிருந்து மதுரை கொண்டுவரப்பட்ட அட்டாக்பாண்டியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, இன்று மாலை 6 மணிக்கு மேல் அட்டாக்பாண்டியை மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி பாரதிராஜா முன்பு ஆஜர்படுத்தியது தனிப்படை போலீஸ்.
இதையடுத்து நீதிபதி பாரதிராஜா, அட்டாக்பாண்டியை அக்டோபர் 6ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.