புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2015

அன்புமணிக்கு கருப்பு கொடி காட்டிய விடுதலை சிறுத்தைகள் 15 பேர் கைது




தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பா.ம.க. போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் முன்னர் பா.ம.க.வின் மகளிர் அணி சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  அதில் அன்புமணி ராமதாஸ் எம்.பி.பங்கேற்றார்.

இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுந்தர் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உட்பட 15 பேர் அங்கு திரண்டு வந்தனர். அன்புமணிக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டிய 15 பேரையும் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் வளைத்து கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ad

ad