புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2015

இலங்கை போர்க்குற்றத்துக்கு சர்வதேச விசாரணை கோரி 21–ந்தேதி பேரணி: வைகோ அறிவிப்பு



ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க மார்ட்டி அட்டிசாரி தலைமையில் மனித உரிமை ஆணையம் நியமித்த மூவர் குழு செப்டம்பர் 16–ல் மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்த அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க பன்னாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய சர்வதேச விசாரணை மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அமைச்சர் மங்கள சமரவீர, பன்னாட்டு விசாரணையை இலங்கை அரசு ஒருபோதும் ஏற்காது என்றும், உள்நாட்டு விசாரணை ஜனவரியில் தொடங்கும் என்றும் மண்டைக் கொழுப்போடும், திமிரோடும் சொல்லியுள்ளான்.

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில், இலங்கை குறித்து மனித உரிமை ஆணையம் தந்த அறிக்கை மீது செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று விவாதத்துடன் வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இதில் ஈழத்தமிழர்களுக்கு பச்சை துரோகம் செய்து, சிங்கள அரசை பாதுகாக்க அமெரிக்க ஏகாதிபத்திய அரசு முனையலாம் எனத் தெரிகிறது.

இத்தகைய தமிழர் துரோகக் கழுத்தறுப்பு வேலைகளுக்கு மனித உரிமைக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் துணைபோகக் கூடாது என்றும், பன்னாட்டு நீதி விசாரணைக்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி, நெஞ்சில் எரிமலையாகக் கொதிக்கின்ற உணர்வுகளின் வெளிப்பாடாக செப்டம்பர் 21 ஆம் தேதி பகலில் ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலுக்கு முன்பாக வீரத்தியாகி முருகதாசன் திடலில் லட்சக்கணக்கான புலம் பெயர் வாழ் ஈழத் தமிழர்கள் பேரணியாகத் திரண்டு விண்முட்டும் முழக்கம் எழுப்ப உள்ளனர்.

ஈழத்தமிழர்களுக்கு நீதியை வழங்க அனைத்துலக நாடுகளை வலியுறுத்தவும், குறிப்பாக இந்தியாவின் நரேந்திர மோடி அரசு, சிங்கள அரசுக்கு துணைபோகும் துரோகத்தைச் செய்யாமல் பன்னாட்டு நீதி விசாரணைக்கான தீர்மானத்தை மனித உரிமைக் கவுன்சிலில் முன் வைக்க வலியுறுத்தவும், அதே செப்டம்பர் 21–ல் தாய்த் தமிழகத்தில் காலை 11 மணி அளவில் தலைநகர் சென்னையிலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ம.தி.மு.க. சார்பில், மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படும்.

நான் நெல்லையிலும், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கோவையிலும், நாசரேத் துரை தூத்துக்குடியிலும், மல்லை சத்யா சென்னையிலும், துரை.பாலகிருஷ்ணன் திருச்சியிலும், கணேசமூர்த்தி ஈரோட்டிலும், செந்திலதிபன் மதுரையிலும், புலவர் செவந்தியப்பன் சிவகங்கையிலும் பங்கேற்பார்கள். பல்லாயிரக்கணக்கில் கழகக் கண்மணிகள் கொடிகளுடன் திரண்டு, முத்துக்குமார் மேனியைப் பற்றி எரித்த நெருப்பின் மீது ஆணையிட்டு, ஈழத் தமிழர்களைக் காக்கும் ஆவேசக் குரலாக முழக்கமிட வாரீர் என அன்புடன் அழைக்கிறேன்.

இந்த அறப்போரில் தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்க உரிமையுடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ad

ad