புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2015

68 வயது திக் விஜய் சிங்கிற்கு சென்னையில் மறுமணம் நடந்ததா?

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களுல் ஒருவரான திக்விஜய் சிங்கின் மனைவி கடந்த 2013ஆம் ஆண்டு இறந்து விட்டார்
. இதையடுத்து 68 வயதான திக்விஜய் சிங்கிற்கும் 44 வயதான அம்ரிதா என்ற டி.வி. தொகுப்பாளருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்தி கசிந்தது.

இதனை இருவருமே மறுக்கவில்லை. இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில் திக்விஜய் சிங்,'' அம்ரிதாவும் அவரது கணவரும் விவாகாரத்து முடிவில் இருக்கின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது '' என்று  கூறியிருந்தார். அம்ரிதாவும் தனக்கு விவகாரத்து கிடைத்தவுடன் திக்விஜய் சிங்கை மணம் புரிய போவதாக சொல்லி வந்தார்.
இந்நிலையில் திக்விஜய்சிங் - அம்ரிதா திருணம்,  கடந்த ஏப்ரல் மாதம்  25 ஆம் தேதி சென்னையில் ரகசியமாக நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இருவரும் அமெரிக்காவில் இருப்பதாகவும் திருமணம் நடைபெற்றது உண்மைதான் என்று திக்விஜய் சிங்கிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

திக் விஜய் சிங்கிற்கு முதல் மனைவி மூலம் 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.  ராஜ்யசபா டி.வி.யில் அம்ரிதா தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்

ad

ad