புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2015

மஹிந்த ராஜபக்ஷ தனிக்கட்சியொன்றைத் தொடங்கி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்புகளிடமிருந்து அழுத்தங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிக்கட்சியொன்றைத் தொடங்கி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்புகளிடமிருந்து
அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது தொடர்பான கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைத்திருந்தார். எனினும் அதுகுறித்து அவர் எதுவித பதிலும் அளிக்கவில்லை.

இந்நிலையில் வார இறுதியில் தங்காலை இல்லத்தில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்ஷவைச் சந்திப்பதற்கு ஏராளம் ஆதரவாளர்கள் திரண்டு வந்திருந்தனர்.

அவ்வாறு வருகை தந்திருந்த ஆதரவாளர்களும் மஹிந்த ராஜபக்ஷ தனிக்கட்சியொன்றைத் தொடங்கி, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

அத்துடன் தற்போதைக்கு உள்ளுராட்சி மன்றங்களில் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் இருக்கும் பலரும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பதிலாக தனிக்கட்சியில் போட்டியிடும் ஆர்வத்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad