இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை நாளை மறுதினம் வெளியிடப்படுமென, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன்
தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமாகிய ஐ.நா மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தமை மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இழைக்கப்பட்டமை என்பவற்றுக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை தொடர்பாக பேரவை அதிக கவனம் செலுத்துமென இதன்போது அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கடந்த வருட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய தமது தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பாரிய போர்க்குற்றம் இடம்பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் முன்வைத்துள்ள ஆலோசனைகளை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமாகிய ஐ.நா மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தமை மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இழைக்கப்பட்டமை என்பவற்றுக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை தொடர்பாக பேரவை அதிக கவனம் செலுத்துமென இதன்போது அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கடந்த வருட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய தமது தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பாரிய போர்க்குற்றம் இடம்பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் முன்வைத்துள்ள ஆலோசனைகளை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.