கர்நாடக அதிமுக உட்கட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி, கர்நாடக அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செல்வராஜ் உள்பட 35 பேர் பெங்களூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா உள்ளிட்ட 35 பேரும், செப்டம்பர் 26 - ம் தேதிக்குள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது