புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2015

யாழ்.மத்தி காலிறுதிக்கு தகுதி

இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட கூடைப் பந்தாட்டத் தொடரின் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்
யாழ். மத்திய கல்லூரி அணி காலிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.
கொழும்பு றோயல் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நேற்று இடம்பெற்ற காலிறுதிக்கு தகுதி பெறும் ஆட்டத்தில் யாழ். மத்திய கல்லூரி அணியை எதிர்த்து காலி அலோசியஸ் கல்லூரி அணி மோதிக் கொண்டது. இதில் யாழ்.மத்திய கல்லூரி அணி 37:27 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.
இன்று இடம்பெறும் காலிறுதி ஆட்டத்தில் றோயல் சர்வதேச பாடசாலை அணி யாழ். மத்திய கல்லூரி அணியுடன் மோதவுள்ளது.

ad

ad