இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட கூடைப் பந்தாட்டத் தொடரின் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில்
யாழ். மத்திய கல்லூரி அணி காலிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.
கொழும்பு றோயல் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நேற்று இடம்பெற்ற காலிறுதிக்கு தகுதி பெறும் ஆட்டத்தில் யாழ். மத்திய கல்லூரி அணியை எதிர்த்து காலி அலோசியஸ் கல்லூரி அணி மோதிக் கொண்டது. இதில் யாழ்.மத்திய கல்லூரி அணி 37:27 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.
இன்று இடம்பெறும் காலிறுதி ஆட்டத்தில் றோயல் சர்வதேச பாடசாலை அணி யாழ். மத்திய கல்லூரி அணியுடன் மோதவுள்ளது.
யாழ். மத்திய கல்லூரி அணி காலிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.
கொழும்பு றோயல் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நேற்று இடம்பெற்ற காலிறுதிக்கு தகுதி பெறும் ஆட்டத்தில் யாழ். மத்திய கல்லூரி அணியை எதிர்த்து காலி அலோசியஸ் கல்லூரி அணி மோதிக் கொண்டது. இதில் யாழ்.மத்திய கல்லூரி அணி 37:27 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.
இன்று இடம்பெறும் காலிறுதி ஆட்டத்தில் றோயல் சர்வதேச பாடசாலை அணி யாழ். மத்திய கல்லூரி அணியுடன் மோதவுள்ளது.