புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2015

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியை ஜேவிபிக்கு கையளிக்க கூட்டமைப்பு தீர்மானம்


தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணியிற்கு கையளிக்க தீர்மானம் எடுத்திருக்கின்றது.
இதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சியின் பிரதமகொறடாவாக மக்கள் விடுதலை முன்னணியின் மதி. அநுரகுமார திஸாநாயக்கவை பிரேரிப்பதாக சபாநாயகரிடம் கூறியுள்ளார்.
இரா.சம்பந்தன் வருகை தராத சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு மேலும் தீர்மானம் எடுத்திருக்கின்றது.

ad

ad