புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2015

இல்ங்கை தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு பாராட்டு விழா


எட்டாவது பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தன் அவர்களுக்கான பாராட்டு வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை  மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.
இதில்  வடக்கு கிழக்கு மாகாணத்தில்  இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவான 11 பாராளுமன்ற உறுப்பினர்களும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரெட்ணசிங்கம், திருமதி சாந்தி ஸ்ரீதரன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்
மாலை 4.00 மணிக்கு திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுடன் ஒன்றுகூடிய இவர்கள் விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டார்கள்.

பின்னர் அங்கிருந்து கடற்படைதள வீதி வழியாக நகர சபை மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இலங்கை தமிழரசுக்கட்சியினர் இவ்வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன். எஸ்.சிறிதரன் இருவரும்  கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

ad

ad