புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2015

எதிர்கட்சித் தலைவர் ..ராஜவரோதயம் சம்பந்தன்


நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள 82 வயதான சம்பந்தன் இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான
இடத்தை வகித்து வருகின்றார்.
சம்பந்தன் பற்றிய சில தகவல்கள்
• 1933 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி இராஜவரோதயம் சம்பந்தன் திருகோணமலையில் பிறந்தார்.
• சம்பந்தன் கல்ஓயா திட்டத்தின் களஞ்சிய பொறுப்பதிகாரியான ஏ.இராஜவரோதயத்தின் மகனேயாகும்.
• சம்பந்தன், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார், குருணாகல் புனித அன்னம்மாள், திருகோணமலை புனித ஜோசப் மற்றும் மொரட்வ புனி செபஸ்தியார் கல்லூரிகளில் பாடசாலை கல்வியை தொடர்ந்தார்.
• பின்னர், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றி சட்டத்தரணியானார்.
• சம்பந்தனின் மனைவியின் பெயர் லீலாவதி
• சம்பந்தனுக்கு சஞ்சீவன், செந்தூரன் மற்றும் கிரிசாந்தி ஆகிய மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
• முதன் முதலாக 1977ம் ஆண்டு சம்பந்தன் பாராளுமன்றிற்கு தெரிவாகியிருந்தார்.
• 1956ம் ஆண்டு சம்பந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார்.
• இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அப்போதைய தலைவர் ஜே.வீ. செல்வநாயகம் 1963 மற்றும் 1970 களில் தேர்தலில் போட்டியிடுமாறு சம்பந்தனை அழைத்த போதிலும் அதனை அவர் நிராகரித்திருந்தார்.
• 1972ம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழர் பேரவை உள்ளிட்டன கூட்டாக இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
• 1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.
• எவ்வாறெனினும் 1983ம் ஆண்டின் நடுப்பகுதியில் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றை புறக்கணித்திருந்தனர்.
• கறுப்பு ஜூலை தாக்குதல், 6 ம் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்திருந்தனர்.
• தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்த காரணத்தினால், 1983ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் திகதி சம்பந்தன் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார்.
• 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
• அதன் பின்னர் 2001ம் ஆண்டு முதல் இதுவரையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.
சம்பந்தனின் பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட விபரங்கள் வருமாறு
1977 திருகோணமலை த.வி.கூ - 15144 - வெற்றி
1989 திருகோணமலை மாவட்டம் த.வி.கூ 6048 - தோல்வி
2001 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ 40110 - வெற்றி
2004 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ 47735 - வெற்றி
2010 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ 24488 - வெற்றி
2015 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ 33834 - வெற்றி

ad

ad