இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2015ஆம் ஆண்டுக்கான தேசிய மட்டகரம் தொடரின் 15 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில்
கொக்குவில் இந்துக்கல்லூரி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளது.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பதுளை விசாகா உயர்தர பெண்கள் பாடசாலையில் இடம் பெற்ற இந்தப் போட்டித் தொடரில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து கொழும்பு விசாகா கல்லூரி அணி மோதிக் கொண்டது. இதில் கொக்கு வில் இந்துக்கல்லூரி அணி இரண்டு ஒற்றையர் ஆட்டத்திலும் வெற்றி பெற்று 2:0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெண்கலத்தை தனதாக்கிக் கொண்டது.