புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2015

நிலநடுக்கத்தின் போது வங்கியில் 20 லட்சத்தை கொள்ளையடித்த பலே திருடர்கள்

டெல்லியில் நேற்று நில அதிர்வுகள் ஏற்பட்ட போது அங்குள்ள வங்கி ஒன்றில் மர்ம நபர்கள் ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
டெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் நில அதிர்வுகள் ஏற்பட்ட போது, அங்குள்ள சிண்டிகேட் வங்கியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு பீதியில் வெளியேறியுள்ளனர்.
அப்போது வங்கியில் கேஷியர் மட்டும் தனியாக இருந்த போது, துப்பாக்கிகளுடன் நுழைந்த 2 மர்ம நபர்கள், ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த விடயம் வெளியே நின்று கொண்டிருந்த ஊழியர்களுக்கு தெரிவதற்குள், கொள்ளையர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். தற்போது அந்த மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

ad

ad