புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2015

இரட்டை சதத்தை தொடர்ந்து சதம் விளாசிய இலங்கை வீரர் அசலன்கா : 2வது டெஸ்ட் போட்டி 'டிரா’


இலங்கை- பாகிஸ்தான் ‘அண்டர்-19’ அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்துள்ளது.
பாகிஸ்தான் ‘அண்டர்-19’ அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியில் இலங்கை வீரர் அசலன்கா இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் கடந்த 10ம் திகதி தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘அண்டர்-19’ அணியில், முதல் இன்னிங்சில் அசலன்ங்கா 124 ஓட்டங்கள் குவித்தார். தவிர, ஜெகன் டேனியல் (51) அரைசதம் அடித்தார்.
இதனால் முதல் இன்னிங்சில் இலங்கை ‘அண்டர்-19’ அணி 305 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில், குல், ஹயாதுல்லா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் ‘அண்டர்-19’ அணி ஹம்சா கான் (81), ஹசன் (60) ஆகியோரின் அரைசதத்தால் 252 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணி சார்பில், பெர்னாண்டோ 4, டேனியல், அசலன்ங்கா தலா 2, சாயர் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
53 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை ‘அண்டர்-19’ அணி 5 விக்கெட்டுக்கு 115 ஓட்டங்கள் எடுத்திருந்த போது 3 நாட்கள் கொண்ட ஆட்டம் முடிவடைந்ததால் போட்டி டிரா ஆனது.
இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது

ad

ad