புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2015

யாழ். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய 5 புதிய செயற்திட்டங்கள்

யாழ். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 483.06 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 புதிய செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டங்கள் அனைத்தும் 2015 ஆம் ஆண்டுமுதல் 2016 ஆம் ஆண்டுக்கு இடையில், நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச்செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருபாலை நீர் வழங்கலை செயற்படுத்த 64.51 மில்லியன் ரூபாவும், பருத்தித்துறை நீர்வழங்கல் திட்டத்திலிருந்து இன்பசிட்டி, சக்கோட்டை, ஆகிய பகுதிகளுக்கு நீர்வழங்க 33.17 மில்லியன் ரூபாவும் பொக்கணையிலிருந்து சுன்னாகம், நிலாவரை பகுதிக்கு நீர் வழங்க 35 மில்லியன் ரூபாவும், வல்வெட்டித்துறை நீர் வழங்கல் திட்டத்திலிருந்து அக்கரைக்கு நீர் வழங்க 12 மில்லியன் ரூபாயும், யாழ். மாவட்ட கிராமிய மட்டத்திலான நீர் வழங்கலைச் செயற்படுத்த 338.38 மில்லியன் ரூபாயும், தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது.
மேலும், இந்த செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி, மத்திய அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதோடு, நிதி கிடைக்கப் பெற்றதன் பின்னர், தேசிய நீர் வழங்கல் அதிகார சபையினூடாக இந்த செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad