இதற்காக வாக்குகள் சேகரிக்க பாண்டவர் அணியினர் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
திருச்சியில் இன்று நாடக நடிகர்களை சந்தித்து அவர்கள் வாக்கு சேகரித்தனர். அப்போது மூத்த நாடக நடிகர் ஜெகன் என்பவர், தான் பழம்பெரும் நடிகர் மனோகர் குரூப்பில் இருந்ததாகவும், 40 வருடமாக சென்னையில் இருந்து பின்னர் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் திருச்சியில் இருப்பதாகவும், தற்போது நடிக்க முடியாத நிலையையும், உடல் நலக்குறைவையும் எடுத்து விளக்கினார்.
அப்போது பேசிய நடிகர் விஷால், இங்கு இருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக பேசுகிறேன். கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம். மாதா மாதம் திரையுலக குடும்பம் சார்பாக 5 ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்றார்.
அப்போது பேசிய ரோகினி, ஜெயித்தவுடன் முதல் கையெழுத்து மூத்த உறுப்பினர்களுக்கு மாதம் ரூபாய் 5000 பென்சன் திட்டம் தான் என்றார்