புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2015

கோயிலுக்கு சென்ற 90 வயது தாழ்த்தப்பட்ட முதியவரை எரித்து கொன்ற கொடூரம்!

த்தரபிரதேசத்தில் கோயிலுக்கு சென்ற 90 வயது நிரம்பிய தாழ்த்தப்பட்ட முதியவரை உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் 
நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜெலான் மாவட்டத்தில் ஹமிர்பூரில் உள்ள மைதானி பாபா கோவிலுக்கு சிம்மா என்ற 90 வயது தலித் முதியவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வழிபாட்டுக்கு சென்றுள்ளார்.  வாயிலில் வைத்து  சஞ்சய் திவாரி என்பவர் கோயிலுக்குள் செல்ல கூடாது என்று தடுத்துள்ளார். இதனை மீறி சிம்மா கோயிலுக்கு செல்ல முயற்சித்துள்ளார். ஏற்கனவே குடிபோதையில் இருந்த சஞ்சய் திவாரி இதனால் ஆத்திரமடைந்தார்.

அந்த முதியவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீயும் வைத்துள்ளார். இதில்  முதியவர் சிம்மா அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  இதனை பார்த்த மற்ற பக்தர்கள் சஞ்சய் திவாரியை அடித்து உதைத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சஞ்சய் திவாரியை கைது செய்தனர். 

இந்த சம்பவத்தில் மேலும் இருவருக்கும் தொடர்புள்ளது. அதில் ஒருவரான முகேஷ் அகி, இந்தோ- அமெரிக்க பிசினஸ் கவுன்சில் தலைவர் ஆவார். அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

ad

ad